Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல்

தனங்கிளப்பை பிறப்பிடமாகவும் சாவகச்சேரி தபாற்கந்தோர் வீதியை வசிப்பிடமாகவும்
கொண்ட கதிரவேலு சிவராமலிங்கம் கடந்த 07.08.2019 அன்று இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கதிரவேலு சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும்
காலஞ்சென்றவர்களான காலஞ்சென்றவர்களான வேலு கதிராசி தம்பதிகளின் அன்பு
மருமகனும் சின்னம்மா அவர்களின் அன்பு கணவரும் அருந்தவசிறி (லண்டன்)
புவனேந்திரராசா (றதி -சுவிஸ்), கவிதா (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்
துளசிமலர் (லண்டன்) சுபாசினி (சுவிஸ்) சக்திவேல் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு
மாமனாரும் காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, மகாலிங்கம் மற்றும் மங்கையற்கரசி,
உருக்குமணி, சந்திரா, செல்வம்,  நவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்
காலஞ்சென்றவர்களான இராசையா, பரமசாமி, பத்மநாதன்,  நாகம்மா மற்றும்
வள்ளிப்பிள்ளை, கந்தசாமி,  இரத்தினம்  காலஞ்சென்ற சின்னதங்கம், மற்றும்
செல்லம்மா, குஞ்சம்மா, தங்கம்மா, இராசம்மா, செல்லையா, கிட்டிணசாமி, நல்லம்மா
ஆகியோரின் மைத்துனரும் கிர்ஸ்ணர், சுப்பிரமணியம்,  நாகலிங்கம்,  கந்தசாமி,
பொன்னம்பலம்,  கெளசலாதேவி வசந்தராணி, குமாரசாமி,  ஆகியோரின்அன்பு சகலனும்
சயனா, கம்சன், அபினா (லண்டன்), நிருசன்,  வினோசன்,  விதுர்சிகா, தஸ்வின்
(சுவிஸ்), கிசானி, கிசாந்தன், கீர்த்தன் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு பேரனும்
ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 11.08.2019 ஞாயிற்றுக்கிழமை அன்னாரின்
இல்லத்தில் நடைபெற்று காலை 10 மணிக்கு  பூதவுடல் தகனக் கிரியைக்காக சாவகச்சேரி
கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை
உற்றார் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்

Share This:

இடம்

தனங்கிளப்பு

வாழ்ந்த இடங்கள்

சாவகச்சேரி

You may have missed