மரண அறிவித்தல்
தோற்றம்
5 October, 1960மறைவு
7 August, 2019திரு கந்தப்பு கந்தசாமி - (இ.போ.ச. முகாமையாளர் வடபிராந்தியம் பருத்தித்துறை) (வயது : 59)
கிழவி தோட்டம், கரவெட்டி
துன்னாலை
கிழவி தோட்டம் கரவெட்டி கிழக்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் துன்னாலை மேற்கு
ஞானசாரியார் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தப்பு கந்தசாமி அவர்கள் நேற்று
முன்தினம் 07.08.2019 புதன்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் கந்தப்பு சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும் குமாரநாதன் ராசம்மா
தம்பதிகளின் அன்பு மருமகனும் மாலினி அவர்களின் அன்பு கணவரும் மகிந்தன்,
அனித்தா (பிரதேச செயலகம் பருத்தித்துறை), துஸ்யந்தன், யசிந்தன் ஆகியோரின்
பாசமிகு தந்தையும், ராஜினி (இலங்கை வங்கி பருத்தித்துறை), சரவணகுமரன்
(ENGINEER R.D.D.குருநகர்), ஆகியோரின் அன்பு மாமனாரும், நிர்மலா (கனடா),
விமலா (லண்டன்) நிமால் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும் உமாபதி (லண்டன்)
பாலகிருஷ்ணன் (லண்டன்), ரோகினி (ஜேர்மனி) நந்தினி (சுவிஸ் ),செந்தில்நாதன்
(சுவிஸ்) சாந்தினி (டென்மார்க்), ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஸ்ரீகரி,
ராகவி ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார் அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை
மறுதினம் (11.08.2019 ) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் ஞானசாரியார்
வீதியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக
வேருண்டை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார்
உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்












