மரண அறிவித்தல்
நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் வவுனியா அண்ணா வீதி, தோணிக்கல்லில் வசித்தவருமாகிய குமாரசாமி போசராஜா நேற்று (06.11.2019 ) புதன்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான குமாரசாமி கண்மணி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான கந்தவனம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற திருமகள் அவர்களின் அன்புக் கணவரும், நிசாந்தன், நிவேதிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற விஜயலட்சுமி, மற்றும் கோவிந்தராசா, காலஞ்சென்ற தேவமலர் மற்றும் கோபாலகிருஷ்ணன், கலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும், தம்பிராசா, சந்திரசேகரம் (லக்சுமி மில் வவுனியா), மகாலிங்கம், சித்திரவடிவேல், காலஞ்சென்ற பூமகள் (கனடா), சிறீகரன் (கனடா), ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 08.11.2019 வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு இல 65/1, அண்ணா வீதி, தோணிக்கல்லில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக தோணிக்கல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
0777516982
இடம்
நெடுந்தீவு, யாழ்பாணம்
வாழ்ந்த இடங்கள்
தோணிக்கல் , வவுனியா