Mon. May 18th, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சிவத்தமிழ்மணி
பண்டிதை பொன் பாக்கியம் (இளைப்பாறிய ஆசிரியர்,  சுழிபுரம் விக்டோரியா கல்லூரி)
அவர்கள் கடந்த 29.07.2019 திங்கட்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நாகமுத்து முத்துப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகளும்
காலஞ்சென்றவர்களான செல்லம் முருகேசு தம்பதிகளின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற
பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும் , லோகரஞ்சனா (ஆசிரியை தொல்புரம்
அ.மி.த.க.பாடசாலை), அவர்களின் பாசமிகு தாயாரும்,  கு.ரவிக்குமார்
(வட்டுக்கோட்டை தொழில்நுட்ப கல்லூரி), அவர்களின் அன்பு மாமியாரும் பிரணவி,
சுரபி, மனோஜீவன், ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் காலஞ்சென்றவர்களான
கதிரவேற்பிள்ளை, இலட்சுமிபிள்ளை, தங்கம்மா, மயில்வாகனம்,  செல்லையா, நாகம்மா,
ஆகியோரின் அன்பு சகோதரியும்,  காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்,  கந்தையா,
நல்லதம்பி, மு.நடராசா (ஓய்வு பெற்ற நிர்வாக உத்தியோகத்தர்  சங்கானை பிரதேச
செயலகம் ), மு.சிவராசா (ஓய்வு பெற்ற ஆசிரியர்), மற்றும் மு.இரத்தினராசா
(கட்டடக் கலைஞர் கனடா), காலஞ்சென்றவர்களான மு.தேவராசா (பொலீஸ் உத்தியோகத்தர்),
ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 01.08.2019 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு
அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக திருவடிநிலை இந்து
மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள்
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
0776102715, 0212250411
சுழிபுரம் கிழக்கு
சுழிபுரம்

Share This:

இடம்

சுழிபுரம்

வாழ்ந்த இடங்கள்

சுழிபுரம் கிழக்கு

You may have missed