Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல் 

உடுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நாகரத்தினம் நல்லையா நேற்று முன்தினம்  23.09.2019 திங்கட்கிழமை  காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மூத்த புதல்வியும் நல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,  காலஞ்சென்றவர்களான நாகேந்திரம், ஜெயக்குமார் மற்றும் பவளம்,  சந்திராதேவி,  விமலாதேவி,  கமலாதேவி,  மாலினிதேவி, ஜெயச்சந்திரகுமார், மாலதி ஆகியோரின் அன்புச் சகோதரியும், செல்வரஞ்சினி (இந்தியா), சிவகுமாரன்,  பிரபாகரன் (லண்டன்), றோசினி (நெதர்லாந்து), பஞ்சதேவி (ஜேர்மனி), சிவபாலன்,  கருணாகரன் (வட பிராந்திய போக்குவரத்து சபை), ஞானரூபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,  விஜயதெய்வேந்திரன் (இந்தியா), சத்தியதேவி (ஆசிரியர் வசாவிளான் சிறி வேலுப்பிள்ளை வித்தியாலயம்), ஜெயக்குமாரி (லண்டன்), செல்வச்சந்திரன் (நெதர்லாந்து), குகனேஸ்வரன் (ஜேர்மனி), சாந்தரூபி, கெளரி (முன்பள்ளி ஆசிரியை ஏழாலை) நந்தினி (ஆசிரியர் மானிப்பாய் இந்துக் கல்லூரி), ஆகியோரின் பாசமிகு மாமியும் பிரதீபன் (லண்டன்), வேணுஜா (கொமர்ஷல் வங்கி நெல்லியடி), பிந்துஜா (விவசாய திணைக்களம் முல்லைத்தீவு), விபிஷணன் (Wintech Bulders), பிரபானுஜா, மாதுரி, டர்சிகா, சுவேதிகா, டீவிகா, திவானுஜா, அபிசாலினி, டிசாலினி, சரண்யா,  அகர்ஷனன் ஆகியோரின் அருமைப் பேர்த்தியும் அகரவனின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 25.09.2019 புதன்கிழமை காலை 11 மணிக்கு உடுவிலில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக பூவோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
0779231621, 0770737340, 0771461026
Share This:

இடம்

உடுவில்

வாழ்ந்த இடங்கள்

உடுவில்

You may have missed