மரண அறிவித்தல்
தோற்றம்
12 July, 1934மறைவு
26 July, 2019திருமதி ஞானாம்பிகை செல்வராசா (வயது : 85)
பிறந்த இடம்
வட்டுக்கோட்டை
வட்டுக்கோட்டை
வாழ்ந்த இடம்
வட்டுக்கோட்டை
வட்டுக்கோட்டை
வட்டுக்கோட்டையைப் பிறப்பிக்கவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஞானாம்பிகை
செல்வராசா நேற்று 26.07.2019 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
காலஞ்சென்றவர்களான நடராசா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் செல்வராசாவின்
(அப்பே ஓவிசியரின்) அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம்,
சிவநேசம், மற்றும் தனலட்சுமி (சிங்கப்பூர்), காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி,
தியாகி கந்தசாமி, குணரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சிதம்பரப்பிள்ளை, சிவலிங்கம் மற்றும்
நவரத்தினம் , செந்திமலர் (அவுஸ்ரேலியா), ஆகியோரின் மைத்துனியும், முருகானந்தன்
(லண்டன்), கஜாநந்தன் போதனாசிரியர் யாழ் தொழில்நுட்ப கல்லூரி, உரிமையாளர்
அம்பிகை ரேடர்ஸ் வட்டு), ஆகியோரின் பாசமிகு தயாரும் கீதாஞ்சலி, லலிதாம்பிகை,
ஆகியோரின் அன்பு மாமியாரும் துஷா, ஆதவன், துர்காயினி (லண்டன்), ஜனார்த்தனன்
(மாணவன் யாழ் இந்துக் கல்லூரி), தீபிகா (மாணவி யாழ் இந்து மகளிர் கல்லூரி)
ஆகியோரின் அன்பு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (28.07.2019) ஞாயிற்றுக்கிழமை காலை 10
மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக
வழுக்கையாறு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை
உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
0447960811982
0770458542
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்












