Sat. Apr 20th, 2024

E- கல்வி திறன் வகுப்பறை பொலிகண்டியில் திறந்து வைப்பு

பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையின் E – கல்வி திறன் விகுப்பறை திறப்பு விழா நேற்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் ந.தேவராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடமராட்சி வலயக் கல்வி பணிப்பாளர் க.சத்தியபாலன்,
சிறப்பு விருந்தினர்களாக பருத்தித்துறை கோட்டக் கல்வி பணிப்பாளர் மா.நவநீதமணி,
வடமராட்சி கல்வி வள நிலைய முகாமையாளர் ஆர்.ஸ்ரீதரன்,  E – கல்வி தொண்டு நிதியத்தின் தலைவர் கெ.முரளிதரன், E – கல்வி தொண்டு நிதியத்தின் உபதலைவர் ஜெ.ஜெயரூபன், E – கல்வி தொண்டு நிதியத்தின் வடமாகாண இணைப்பாளர் சி.யோகபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்