Thu. Mar 28th, 2024

6 வயதுச் சிறுவன் வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் காணாமல் போயிருந்த நிலையில் வீட்டின் பின்புறமாக இருந்த வெள்ளத்திருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சங்கானை தேவாலயப் பகுதியைச் சேர்ந்த பார்த்தீபன் ஸ் ரீபன் என்ற 6 வயதுச் சிறுவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் உள்ள வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென காணாமல் போயுள்ளார். அவரை பல இடங்களில் தேடிப் பார்த்த போதிலும் காணாததையடுத்து மானிப்பாய் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
நேற்று இரவு சிறுவன் காணாமல் போயிருந்த இடத்திலிருந்து சற்று தூரத்தில் குடிநீர் விநியோகத்திற்காக குழாய் பொருத்துவதற்கான வெட்டப்பட்ட கிடங்கில் தேங்கியிருந்த வெள்ளத்திலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்