300 கிராம் பாண் 190 ரூபாவுக்கு, புதிய உத்தியில் பேக்கரிகள்
நாட்டில் நிலவும் கோதுமை மா தட்டுப்பாடு காரணமாக பாணின் விலையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுவருகிறது
இந்த நிலையில் பாணின் நிறையை குறைத்து அதன் விலையை அதிகரிக்கும் விளையாட்டில் பேக்கரி உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
தற்பொழுது 300 கிராம் எடையுள்ள பாணை 190 ரூபாவுக்கு விற்கும் முயற்சியில் பேக்கரி உரிமையாளர்கள் ஈடுபட்டு வருவதாக பேக்கரி உரிமையாளர் சங்க தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.