Mon. May 18th, 2026

25 வருட வாக்குறுதியை மரண தறுவாயிலாவது நிறைவேற்றுங்கள்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பிற்கு உழைக்கும் அமைச்சா்கள் 20ம் அரசியலமைப்பை உருவா க்கவும் ஒத்துழைப்பு நல்கி 25 வருட வாக்குறுதியை மரண தறுவாயிலாவது நிறைவேற்றுங்கள்.

மேற்கண்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தனது ருவிட்டா் பக்கத்தில் எழுதியுள்ளாா்.

அதில் மேலும் அவா் தொட்டு சொல்லியுள்ளதாவது, இதேவேளை, ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் ஆனால் அதனைச் செய்வதற்கான நேரம் இதுவல்ல

என்று கூறுபவர்களுக்கு தான் சவால் விடுப்பதாகவும் சுமந்திரன் கூறியுள்ளார். மேலும்  ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பிற்பாடு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பீர்களெனின்

அதற்கு முன்கூட்டிய நம்பிக்கையை அளிக்கும் வகையில் இப்போதே நாடாளுமன்றத்தில் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றுங்கள். அதன்மூலம் ஜனாதிபதி முறை ஒழிப்பிற்கான

முதற்படியை எடுத்து வைத்து விட்டோம். அடுத்தகட்ட நடவடிக்கைகளை தேர்தலின் பின்னர் முன்னெடுப்போம் என்ற நம்பிக்கையை மக்களுக்கு வழங்குங்கள்.

அதனைக்கூடச் செய்ய முடியாது என்றால் அவர்களுடைய கொள்கை உண்மையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்பதாக இருக்கின்றதா

என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியாது என்று சுமந்திரன் தெரிவித்திருக்கிறார்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed