25ம் திகதி முதல் சகல ஆரம்ப பாடசாலைகளும் ஆரம்பம்
அரச மற்றும் அரச அனுமதிபெற்ற தனியார் பாடசாலைகள் கொவிட் 19 தொற்று நிலமையின் கீழ் 2021 ஆண்டுக்காக ஆரம்ப பாடசாலைகளை மீண்டும் 25ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சீ.கே. பெரேரா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
அரச மற்றும் அரச அனுமதிபெற்ற தனியார் பாடசாலைகள் கொவிட் 19 தொற்று நிலமையின் கீழ் 2021 ஆண்டுக்காக ஆரம்பப் பாடசாலைகளை மீண்டும் சகல ஆரம்ப பாடசாலைகளும் மற்றும் ஏனைய பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளும் 2021.10.25 அன்று ஆரம்பிக்கப்படுகின்றதை தயவுடன் தெரிவிக்கின்றேன். ஏனைய கட்டங்களின் கீழ் பாடசாலைகளை திறக்கும் தினம் தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படுவதோடு கொவிட் 19 தொற்றுநிலையினுள் பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பித்து இடர்பாடின்றி கொண்டுசெல்வதற்காக அனைவரினதும் ஒத்துழைப்பினை எதிர்பார்க்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.