21 ம் திகதி பாடசாலைகளை ஆரம்பிக்க ஒத்துழைக்க வேண்டும்- கல்வி அமைச்சு
எதிர்வரும் 21ம் திகதி ஆரம்பக் கல்வி பாடசாலைகள் ஆரம்பமாகும் நிலையில் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கல்வி அமைச்சு கோரியுள்ளது.
வடமாகாணத்தில் முதற்கட்டமாக 200 மாணவர்களைக் கொண்ட ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான பாடசாலைகள் எதிர்வரும் 21ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை மாகாண ஆளுநர்கள் அனைவரும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பாக கூட்டாக தீர்மானம் எடுத்துள்ளனர்.
எனவே மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் அந்தந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் போன்றோர் விழிப்புணர்வை ஏற்படுத்தி மாணவர்கள் பாடசாலைகளுக்கு வருவதை ஊக்கப்படுத்துமாறும் கல்வி அமைச்சு கோரியுள்ளது.
கடந்த 6 மாதங்களாக கொரோனா பெருந் தொற்று காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் 21 ம் திகதி முதல் 200 மாணவர்களுக்கு குறைவான 680 பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.