2021 O/L பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது.
2021ம் ஆண்டுகான கல்விப் பொதுத் தர சாதாரண பரீட்சை அடுத்த வருடம் பெப்ரவரி 21ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இன்று காலை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்படி 2021ம் ஆண்டுகான க.பொ.த.சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 3 ஆம் திகதி வரையில் பரீட்சையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார் .
கொரோனா நிலமையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் . மேலும் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை நவம்பர் 14 ஆம் திகதியும் , க.பொ.த உயர்தர பரீட்சை நவம்பர் 15 முதல் 2021 டிசம்பர் 10 வரை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.