2019ம் ஆண்டில் 10493 பேர் டெங்கு காய்ச்சலால் பதிப்பு! 91 பேர் உயிரிழப்பு.
2019ம் ஆண்டில் டெங்கு காய்ச்சலினால் 10493 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 91 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தகவல்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.
வருடத்தின் இறுதி 5 மாதங்களிலேயே அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர். இடைக்கிடையே நிலவிய மழையுடன் கூடிய வானிலையால்
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாக சுகாதாரப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் மாத்திரம் 21,567 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக
தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் அநுர ஜயசேகர தெரிவித்தார். இந்நிலையில், இந்த வருடத்திற்கான முதலாவது டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை
எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவியுள்ள பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக
வைத்திய நிபுணர் அநுர ஜயசேகர கூறினார்.