வேலணையில் அதிக தொற்றாளர்
வேலணை சுகாதார பிரிவில் 32 பேர் உட்பட யாழ் மாவட்டத்தில் 62 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று வெளியான முடிவுகளின் அடிப்படையில் வேலணை சுகாதார பிரிவில் 32 பேருக்கும், பல்கலைக்கழகத்தில் ஒருவருக்கும், சாவகச்சேரி சுகாதார பிரிவில் 6 பேருக்கும், பருத்தித்துறை சுகாதார பிரிவில் 4 பேருக்கும், கோப்பாய் சுகாதார பிரிவில் 3 பேருக்கும், மருதங்கேணி சுகாதார பிரிவில் ஒருவருக்கும், யாழ்ப்பாணம் சுகாதார பிரிவில் 10 பேருக்கும், சாவகச்சேரி சுகாதார பிரிவில் 13 பேருக்கும், யாழ் வைத்தியசாலையில் 18 பேருக்கும், சங்கானை வைத்தியசாலையில் 2 பேருக்கும், வேலணை வைத்தியசாலையில் 2 பேருக்கும், பண்டத்தரிப்பு வைத்தியசாலையில் ஒருவருக்கும் என யாழ் மாவட்டத்தில் 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.