Thu. Apr 25th, 2024

வேம்படி மாணவி தவறான முடிவெடுத்தில் மரணம்

யாழ் வேம்படி மகளிர் பாடசாலை உயர்தர மாணவி தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியாலையைச் சேர்ந்த செல்வி பிரேமச்சந்திரன் திசாரா என்பவரே  இன்று அதிகாலை (25.11.2021) 1.00 மணியளவில் தவறான முடிவெடுத்தில் உயிரிழந்துள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து வேம்படியில் கற்றுவந்த வேளையில் இன்றைய தினம் செயன்முறை பரீட்சை தொடர்பாக பாடசாலைக்கு வருமாறு ஆசிரியரால் அழைக்கப்பட்டிருந்தார்.
அதற்கான தயார்ப்படுத்தல்களையும் செய்துவிட்டு தாய், அண்ணன், பேரன் பேத்தியுடன் சந்தோசமாகவே ரீவி பார்த்துவிட்டே இந்த தவறான முடிவை எடுத்துள்ளார்.
சில வருடங்களின் முன்னர் தந்தையை இழந்திருந்த நிலையில் தாய் மற்றும் தமையனின் குறிப்பாக பேரன் பேத்தியின் பூரண அன்பு, அரவணைப்பு , பாசத்துடன் எந்தக் குறையுமின்றி வளர்ந்துவந்த குட்டி தேவதை காலனின் அழைப்பில் சென்றுவிட்டார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்