வீதிக்கு இடையூறாக போடப்பட்ட கொங்கிறீற் மக்கள் விசனம்
வீதியில் தனிநபரால் மதிலுக்கு அருகில் போடப்பட்ட கொங்கிறீற்ரால் பொதுமக்கள் தமது விசனத்தை வெளியிட்டுள்ளனர்.
நெல்லியடி பொன்கந்தையா வீதியில் தனிநபரால் போடப்பட்ட கொங்கிறீற்ரால் அப்பகுதியில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இவ்வீதி சிறிய காலத்திற்கு முன்னர் பிரதேச சபையால் வீதி புனரமைபு நடைபெற்றுள்ளது.
குறித்த தனிநபரால் தனது மதிலிலிருந்து வீதி பக்கமாக சுமார் அடி தூரத்திற்கு உயரமாக கொங்கிறீர் போடப்பட்டுள்ளது. இதனால் இரு சிறிய ரக வாகங்களே செல்வது கடினமாகவுள்ளது. இது தொடர்பாக கரவெட்டி பிரதேச சபை, ஜெ/376 கிராம அலுவலகர் மற்றும் அப்பகுதி பிரதேச சபை உறுப்பினர்கள் கவனமெடுக்குமாறும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.