வீட்டில் இறந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பருத்தித்துறை கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த 64 ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
பல்வேறுபட்ட நோயால் பீடிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு வீட்டில் உயிரிழந்துள்ளார். குறித்த நபரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.