Fri. Mar 29th, 2024

விளையாட்டு நிர்வாகிகள் கற்கை நெறிக்கு 12 பேர் தெரிவு

பெண்களுக்கான விளையாட்டு நிர்வாகிகள் கற்கை நெறிக்கு வடமாகாணத்தில் இருந்து 12 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்டத்தில் 3 பேரும், வவுனியா மாவட்டத்தில் 3 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் இருவரும், கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவரும், மன்னார் மாவட்டத்தில் 3 பேரும் என வடமாகாணத்தில் 12 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில்
அ. அமுதினி, ஜே. அனித்தா தேனேஜா ஜே. ஜே.  பயஸ், ஆகியோரும்,
வவுனியா மாவட்டத்தில்
எஸ். கலைவாணி, கே. நிதர்சன,
எஸ். அம்பிகா ஆகியோரும்,
முல்லைத்தீவு மாவட்டத்தில்
என்.ஹேமா தனுஜா, ஆர்.கவிஞ்சா ஆகியோரும்,
கிளிநொச்சி மாவட்டத்தில்
பி. ஸ்ரீமிதுலாவும்
மன்னார் மாவட்டத்தில்
ஏ. அனுசலா, ஏ.திரெசில்டு ஃபிகுராடோ, எல் என் டிலானி தில்ருக்ஷி ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் மெய்வல்லுநர் சங்கத் தலைவர் ஜெனரல் பாலித பெர்ணான்டோ தலைமையில் இவர்கள் நிகழ்நிலையில் இவர்கள் தமிழ் மொழியில் தமது முன்வைப்பைச் செய்து நெறிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் ஒட்டு மொத்தமாக 65 பேர் இந்நெறிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்