விபத்தில் மருதங்கேணி உத்தியோகத்தர் உயிரிழப்பு
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றிய இளம் குடும்பஸ்தரே இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் வேம்படி உடுத்துறையைப் பிறப்பிடமாகவும், கொக்குளாயை வசிப்பிடமாகவும் கொண்ட யோகச்சந்திரன் பிரகலதன் (லதன்) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சையிக்கிளில் நேற்று முன்தினம் (2) ஆசிரியையான தனது மனைவியை பாடசாலையில் இறக்கிவிட்டு திரும்பி வரும் வழியில் இன்னுமொரு மோட்டார் சையிக்கிளுடன் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.