Fri. Mar 29th, 2024

வவுனியாவில் பாலியல் தொழிலாளிக்கு கொரோனா

வவுனியாவில் பாலியல் தொழிலாளிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா பகுதியில் தொற்றாளர்களின் எண்ணிகை அதிகரித்து வரும் நிலையில் வவுனியா நகர் பகுதி வர்த்தக நிலையங்களில் பணிபுரிவோருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதேவேளை வவுனியா வீதியில் நின்ற பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண் ஒருவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனையடுத்து அவர் தலைமறைவாகியுள்ள நிலையில் நேற்று இரவு பொலீஸாரின் உதவியுடன் பிடிக்கப்பட்டு வவுனியா கொரோனா தொற்று பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்