Fri. Mar 29th, 2024

வல்லையில் விபத்து இருவர் காயம்

வல்லைச் சந்தி பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று புதன்கிழமை பிற்பகல் 5.30 மணியளவில் வல்லைப் பாலத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் வடமராட்சி கெருடாவில் பகுதியைச் சேர்ந்த இருவரே காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று பிற்பகல் உழவு இயந்திரம் சென்று கொண்டிருந்த போது, மணல் பகுதிக்கு திருப்புவதற்காக வேகத்தை குறைத்த போது பின்பக்கமாக வந்த மோட்டார் சையிக்கிள் விபத்திற்குள்ளானதாக உழவு இயந்திரசாரதி வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்