Fri. Mar 29th, 2024

வடமாகாணம் பற்றி அறிந்திடுங்கள்

வடக்கில் சிறிய மாவட்டம் – யாழ்ப்பாணம்
வடக்கில் பெரிய மாவட்டம் – முல்லைத்தீவு
வடக்கில் கடற்பரப்பில்லாத மாவட்டம் – வவுனியா.
வடக்கில் குளங்கள் அதிகமாக காணப்படும் மாவட்டம் – முல்லைத்தீவு
வடக்கில் காணப்படும் பெரிய தீவு – நெடுந்தீவு
வடக்கில் சிலிக்கன் மணல் காணப்படும் இடம் – நாகர்கோவில்
வடக்கு மாகாணசபை அமைந்துள்ள இடம் – கைதடி
வடமாகாணத்தில் சனத்தொகை அடர்த்தி கூடிய மாவட்டம் – யாழ்ப்பாணம்
வடமாகாணத்தில் சனத்தொகை அடர்த்தி குறைந்த மாவட்டம் – முல்லைத்தீவு
வடமாகாணத்தின் பரப்பளவு – 8884 சதுர கிலோமீட்டர்
வடமாகாணத்தின் நிலப்பரப்பு 8290 சதுர கிலோமீட்டர்
வடக்கில் எண்ணெய் வளம் உள்ள மாவட்டம் – மன்னார்
வடக்கில் சிறுவர் நீதிமன்றம் அமைந்துள்ள இடம் – குருநகர், யாழ்ப்பாணம்
வடக்கில் அல்லது இலங்கையில் நீளமான பாலம் – வேலணை_புங்குடுதீவு
வடக்கில் காணப்படும் முனை –பருத்தித்துறை (பேதுறு)
வடக்கில் காணப்படும் நீரேரிகள் – கச்சாய் அல்லது கிளாலி, சுண்டிக்குளம், தொண்டைமானாறு
இலங்கையின் வடக்கின் புராதனபெயர் – நயினாதீவு (நாகதீவு)
வடக்கில் இருந்து பாராளுமன்றம் சென்ற முதலாவது பெண் – 15 February 1989 – 24 June 1994 – திருமதி புலேந்திரன் ராஜமனோகரி – வன்னி
வடக்கில் ஓட்டு தொழிற்சாலை ஒட்டுசுட்டானிலும், உப்பளம் ஆனையிறவிலும், சீமேந்து தொழிற்சாலை காங்கேசன்துறையிலும் இரசாயன தொழிற்சாலை பரந்தனிலும் காணப்படுகிறது
வடமாகாணத்தில் பாதுகாக்கப்பட்ட பறவைகள் விலங்குகள் காப்பகம் என அறிவிக்கப்பட்ட இடம் – சுண்டிக்குளம் (கிளிநொச்சி மாவட்டம்)
வேலணை தீவு அல்லது லைடன் தீவுகள் எனப்படுவது வடக்கில் பெரிய கூட்டிணைக்கப்பட்ட தீவாகும்
யாழ்ப்பாணத்தில் காணப்படும் ஒரே ஆறு – வழுக்கையாறு (பருவகால ஆறு)
இலங்கையில் காணப்படும் குளங்களில் மூன்றாவது பெரிய குளம் – இரணைமடுக் குளம்
“செங்கையாழியன்” என அழைக்கப்படும் வடமாகாணத்தின் மறைந்த எழுத்தாளர் – கலாநிதி க.குணராசா
வடக்கில் உள்ள கைத்தொழிற்பேட்டை – அச்சுவேலி
வவுனிக்குளத்தை கட்டுவித்தவன் – எல்லாளன்.
பனைமரத்தின் விஞ்ஞான பெயர் – ‘Borassus flabellifer’
வடக்கிற்கான ரயில் சேவை 1989.01.19 பின் 13.10.2014 உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
வடக்கு ரயில் பாதையை புனரமைத்த இந்திய நிறுவனம் – இர்கொன்
இரணைமடு நீர் விநியோக திட்டத்திற்கு உதவி வழங்குவது – ஆசிய அபிவிருத்தி வங்கி
இரணமடு நீர் விநியோக திட்டத்திற்கு மாற்றீடான மற்றுமொரு திட்டம் – ஆறுமுகம் திட்டம்.
யாழ்ப்பான பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது – ஓகஸ்ட் 1, 1974
வடமாகாணத்தில் ஒவ்வொரு வருடமும் மரம் நடுகை தினம் நவம்பர் 01 – 30 வரை கொண்டாடப்படுகிறது.
மருத மரத்தின் விஞ்ஞான பெயர் – Terminalia elliptica.
வெண்டாமரை பூவின் விஞ்ஞான பெயர் – Nelumbo nucifera.
ஆண் மானின் விஞ்ஞான பெயர் – Axis axis.
சுன்னாகம் கழிவு ஒயில் தொடர்பான நிறுவனம் – நொதேர்ன் பவர்
யாழ்ப்பான நூல்நிலையம் எரிக்கப்பட்ட ஆண்டு – 31.05.1981
யாழ்ப்பாண வரலாற்றை கூறும் நூல்கள் – வையாபாடல், யாழ் வைபவ மாலை.
யாழ்ப்பான பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் – சேர் பொன் இராமநாதன்.
முறிந்த பனை (The Broken Palmyrah) என்ற நூலை எழுதியவர்கள் – ராஜினி திராணகம, ராஜன் ஹூல், சிறிதரன், தயா சோமசுந்தரம்.
மன்னருக்கான ரயில் சேவைகள் 1914ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டாலும் யுத்தத்தின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டது – 14.03.2015.
மன்னார் – நாவற்குழி பிரதான பாதை A32.
பரந்தன் – முல்லைத்தீவு பிரதான பாதை A35.
மாங்குளம் – முல்லைத்தீவு பிரதான பாதை A34.
முல்லைத்தீவோடு இணைக்கப்பட்ட பிரதேசம் – மணலாறு (வெலிஓயா).
யாழ் நூலகம் ஆரம்பிக்கப்பட்டது – 1933 ஆம் ஆண்டு.
இலங்கையில் வறுமை கூடிய மாவட்டம் -கிளிநொச்சி.
மதுபான விற்பனை மற்றும் எய்ட்ஸ் பாதிப்பு அதிகரித்து காணப்படும் மாவட்டம் – யாழ்ப்பாணம்
யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து 1984 பெப்ரவரியில் கிளிநொச்சி மாவட்டம் பிரிக்கப்பட்டது.
யாழ் கோட்டை போர்த்துகேயரால் 1625ல் கட்டப்பட்டது.
தற்போது காணப்படும் யாழ் கோட்டை ஒல்லாந்தரால் உடைக்கப்பட்டு 1658 யூன் 23 ற்கு பின் கட்டப்பட்டதாகும்.
பண்டைய யாழ்ப்பாண அரசின் நாணயம் – சேது நாணயம்.
யாழ்ப்பாண அரசின் பழைய சின்னமாக விளங்குவது – நந்தி.
வன்னி இராட்சியம் வீழ்ச்சியடைந்தது – 1803ம் ஆண்டு.
ஒல்லாந்தரால் சொத்துரிமை தொடர்பாக யாழ்ப்பாணத்துக்கு மட்டும் உரித்தான சட்டம் – தேசவழமைச் சட்டம்.
யாழ் நூலை எழுதியவர் – சுவாமி விபுலானந்தர் 1947.
சுவாமி விபுலானந்தர் இயற்பெயர் – மயில்வாகனன் 1892.
சைவசமய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் – ஆறுமுகநாவலர் (1822 டிசம்பர் 18 ஆறுமுகம்பிள்ளை).
நாவலர் 1872 இல் முதல் உருவாகிய சைவ ஆங்கிலப் பாடசாலை – வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலை.
மன்னாரில் எண்ணெய் வள ஆய்வில் ஈடுபட்ட நிறுவனம் – கெய்ன் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான கெய்ன் லங்கா

மன்னார் பற்றிய மேலதிக தகவல்கள்
# இலங்கையின் 2வது பெரிய ஆறு மல்வத்து ஓயா உட்பட 7 ஆறுகள் மன்னார் ஊடாக கடலை அடைகிறது (மேதரகம்மான ஆறு, கல்லாறு, மல்வத்து ஓயா எனப்படும் அருவியாறு, நாயாறு, சிப்பியாறு, பாலியாறு, பறங்கியாறு
# 162km தென்கிழக்காசியாவில் அதிக மீன் வளங்களை கொண்டது
# ஆதிகால துறைமுகமாகிய மாதோட்ட அமைவிடம்
# வில்பத்து உட்பட அதிக காடு வளங்களை கொண்ட மாவட்டம்
# வடக்கில் இனம் காணப்பட்ட பாரிய 7 நிலத்தின் கீழ் நீர் நிலைகளில் 5 நீர்நிலைகளை கொண்டது (வனாத்தைவில், கொண்டச்சி, முருங்கன், பெரியவில்லு, வெள்ளான்குளம்)
# இராமானியத்தில் வரும் இராமர்பால அமைவிடத்தை கொண்டது
# இலங்காபுரியை காக்கும் 5 ஈஸ்வரங்களின் பாடல் புகழ் பெற்ற திருகேதீஸ்வரம், ஆரம்ப கத்தோலிக்க மடுதேவாலயம், 800 ஆண்டுகள் பழமையான அராபிய வர்த்தகர்களினால் கொண்டுவரப்பட்ட 60 அடி விட்டம் கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய பயோபப் மரத்தை கொண்டது
# பூதங்களால் நிர்மாணீக்கப்பட்டதாக கூறப்படும் கட்டுகரை குளத்தை கொண்டது
# மகாபாரத அர்ஞ்சுன காலத்து அல்லிராணி கோட்டை கொண்டது
# இலங்கையின் நெற்களஞ்சியம் (Rice Bowl area) கொண்டது
# சர்வதேச இணைப்பு நெடுஞ்சாலை கொண்டது
# இன்னும் பல கூறலாாம்்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்