Wed. Apr 24th, 2024

வடமராட்சி வலய எறிபந்து உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணி இரு பிரிவுகளில் சம்பியன்

வடமராட்சி கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான பெண்களிற்கான எறிபந்தாட்டப் போட்டியில் 17, 20 வயது இரு பிரிவுகளிலும்  உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர்.
இதன் இறுயாட்டம் இன்று  செவ்வாய்க்கிழமை கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
20 வயதிற்குட்பட்ட பெண்களிற்கான
இறுதியாட்டத்தில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணியை எதிர்த்து நெல்லியடி மத்திய கல்லூரி அணி மோதியது. இதில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணி 25:16, 25:21 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுச் சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர். 3ம் இடத்தைப்  வட இந்து மகளிர் கல்லூரி அணி பெற்றனர்.
17 வயதிற்குட்பட்ட பெண்களிற்கான இறுயாட்டத்தில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணியை எதிர்த்து நெல்லியடி மத்திய கல்லூரி அணி மோதியது.
முதலாவது செற்றில்  உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணி 25:21 என புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இரண்டாவது செற்றில் நெல்லியடி மத்திய கல்லூரி அணி பலத்த போராட்டத்தில் 25:23 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தனர். இதனால் வெற்றி தோல்வியை தீர்மானக்கும் 3வது செற்றில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 25:09 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுச் சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்