Fri. Mar 29th, 2024

வடமராட்சி கால்பந்தாட்டதில் கரவைசுடர் சம்பியன்

வடமராட்சி உதைபந்தாட்ட லீக் நடாத்திய கால்பந்தாட்ட தொடரில் கரவைசுடர் அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
இதன் இறுதியாட்டம் கரணவாய் கொலின்ஸ் விளையாட்டு கழக மைதானத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் கரவை சுடர் அணியை எதிர்த்து உடுப்பிட்டி சிவகுமரன் அணி மோதியது.
ஆட்டம் ஆரம்பம் முதல் இறுதிவரை இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்களல்ல என்பதனை நிருபிக்கும் முகமாக விளையாடினர். இதனால் ஆட்ட நேரத்தில் இரு அணிகளாலும் கோல் எதனையும் பெற முடியவில்லை.
இதனால்
சமநிலை தவிர்ப்பு உதை மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது. இதில் கரவை சுடர் அணி 3:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டனர்.
இதில் ஆட்ட நாயகனாக கரவை சுடர் அணியை பிரதிதிநிதித்துவம் செய்த
கிருபாகரன் சிறந்த கோல் காப்பாளராக கரவை சுடர் அணியை பிரதிநிதித்துவம் செய்த செலோஜன் தொடராட்ட நாயகனாயகனாக
சிவகுமரன் அணியை பிரதிதிநிதித்துவம் செய்த சர்மிலன்,
நன்னடத்தை அணியாக மாலைசந்தை மைக்கல் விளையாட்டு கழகமும் தெரிவு செய்யப்பட்டனர்.
வடமராட்சி உதைபந்தாட்ட லீக்கின் தலைவர் கு.சத்தியசீலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
முதன்மை விருந்தினராக கம்பர்மலை வேலுப்பிள்ளை நினைவாலயத்தின்  ஸ்தாபகர் வே.கஜேந்திரன் கலந்து கொண்டார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்