Thu. Apr 25th, 2024

வடமராட்சியில் 18 வயதுப் பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு

வடமராட்சி பகுதியில் 18 வயதுப் பெண் கூட்டு பாலியல் துன்புறுத்தல், யுவதி வைத்தியசாலையில் துன்னாலை பகுதி 4 இளைஞர்கள் தலைமறைவாகியதுடன், குறித்த இளைஞர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலீஸார் வலைவீச்சு நடாத்தியுள்ளனர்.

வடமராட்சி நெல்லியடி பொலீஸ் பிரிவிற்குட்பட்ட 18 வயதுடைய பெண் ஒருவர் வடமராட்சி திக்கம் பகுதியில் கூட்டாக 4 பேர் சேர்ந்து பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய சம்பவம் பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
நெல்லியடி பொலீஸ் பிரிவிற்குட்பட்ட கரவெட்டி கிராம பகுதியைச் சேர்ந்த 18வயது முடிவடைந்த பெண் ஒருவர் தொலைபேசி ஊடாக முகம் பார்காது இளைஞர் ஒருவருடன் காதல் தொடர்பில் ஈடுபட்டுள்ளார். குறித்த இளைஞன் ஆசை வார்த்தை காட்டி திருமணம் செய்வதாக கூறி அவரை நேற்று செவ்வாய்க்கிழமை விட்டை வருமாறு அழைத்துள்ளார். குறித்த யுவதியும் வீட்டில் இருந்த சொற்ப நகை மற்றும் பணத்துடன் விட்டை விட்டு வெளியேறி குறித்த காதலனுடன் மோட்டார் சையிக்கிளில் சென்றுள்ளார். குறித்த நபருடன் ஐஸ் கிறீம் மற்றும் சிற்றுண்டி அருந்திவிட்டு குறித்த பெண்ணை தனது தாயாருக்கு அறிமுகப்படுத்தி வைப்பதாக கூறி திக்கம் பகுதியில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அதன் பின்னர் தண்ணீர் வாங்குவதாக கூறி யுவதியை தனியாக இருத்திவிட்டு இளைஞர் வெளியே செல்ல அங்கு வந்த மூன்று இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். அதன் பின்னர் குறித்த யுவதியின் காதலனும் சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு குறித்த பெண்ணை அவர் வசிக்கும் கிராமத்து வீதியில் இறக்கிவிட்டு சென்றுள்ளதாக நெல்லியடி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற இடம் மற்றும் கூட்டு பாலியல் செயற்பாட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கும் துன்னாலை பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களும் பருத்தித்துறை பொலீஸ் பிரிவிற்கு இருப்பதால் குறித்த விசாரணையை பருத்தித்துறை பொலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான 4 இளைஞர்களும் தலைமறைவாகியுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்