வடமராட்சியில் மின்சாரம் தாக்கி ஒருவர் இளம் குடும்பஸ்தர் பலி
வடமராட்சி உடுப்பிட்டி பகுதியில் மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்த்தர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று பிற்பகல் வடமராட்சி உடுப்பிட்டி பகுதியில் ஒருவரின் வீட்டில் நடைபெற்றது.
சம்பவத்தில் காரைநகர் மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த குமாரசாமி சுதன் (வயது 27) என்பவரே உயிரிழந்துள்ளார்.
காரைநகர் பகுதியைச் சேர்ந்த மேசன் வேலை செய்யும் இவர், உடுப்பிட்டி பகுதியிலுள்ள ஐயர் ஒருவரின் வீட்டின் மேற்புறத்தில் பொம்மை ஒன்றை வைப்பதற்காக கம்பியை கொண்டு வேலை செய்யும் போது கம்பியானது பிரதான வீதிக்கு மேற்புறமாக அமைக்கப்பட்ட மின்சார சபை கம்பியுடன் தொடுகையுற்றதால் மின்சார தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார். இவரை வல்வெட்டித்துறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.