வடமராட்சி பகுதியில் இறந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரணவாய் அண்ணாசிலையடியைச் சேர்ந்த 61 வயதுப் பெண்ணுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்த போதிலும் அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அதன் பின்னர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இருப்பினும் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கரணவாய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து குடும்பத்தினர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனர். அக்குடும்பத்தில் வசித்த 93 வயதுப் பெண் நேற்று இரவு உயிரிழந்துள்ளார். அவருக்கான பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.