யாழ் முயற்சியாளர் விற்பனைக் கண்காட்சி
யாழ் முயற்சியாளர் உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கான விற்பனைக் கண்காட்சி நாளை புதன்கிழமை முதல் தொடர்ந்து 3 நாட்களாக முற்பகல் 9.30 மணி முதல் இரவு 8 மணிவரை முத்திரைச் சந்தி சங்கிலியன் பூங்காவில் நடைபெறவுள்ளது.
யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண பிரதேச செயலக செயலாளர் திருமதி அன்ரன் யோகநாயகம் எழிலரசி, யாழ் மாநகர ஆணையாளர் தனபாலசிங்கம் ஜெயசீலன், கெளரவ விருந்தினராக வடமாகாண தொழில்துறை திணைக்கள மாகாண பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.