யாழ் மாவட்டத்தில் 34 பேருக்கு கொரோனா
நெல்லியடி பொலீஸ் உத்தியோகத்தர், நெல்லியடி தனியார் வங்கி உத்தியோகத்தர் உட்பட உட்பட யாழ் மாவட்டத்தில் இன்று 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை வெளியான முடிவுகளின் அடிப்படையில் சாவகச்சேரி சுகாதார பிரிவில் 5 பேருக்கும், யாழ்ப்பாணம் சுகாதார பிரிவில் 3 பேருக்கும், கரவெட்டி சுகாதார பிரிவில் 8 பேருக்கும், கோப்பாய் சுகாதார பிரிவில் இருவருக்கும், நல்லூர் சுகாதார பிரிவில் 5 பேருக்கும், சண்டிலிப்பாய் சுகாதார பிரிவில் 6 பேருக்கும், வேலணை சுகாதார பிரிவில் 5 பேருக்கும் என யாழ் மாவட்டத்தில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.