Fri. Mar 29th, 2024

யாழ் மாவட்டத்தில் தடுப்பூசி ஏற்றும் நிலையங்கள்

கொவிட்-19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தில்  யாழ் மாவட்டத்தில் நாளை 29ம் திகதி தடுப்பூசி ஏற்றப்படும் நிலையங்கள் தொடர்பாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்  வெளியிட்டுள்ளார்.  சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் , அதன் நிலையங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சங்கானை சுகாதார பிரிவில்
யா/வட்டு திருநாவுக்கரசு பாடசாலை, யா/பண்ணாகம் வடக்கு அ.மெ.த.க பாடசாலையிலும்
சாவகச்சேரி சுகாதார பிரிவில்
சாவகச்சேரி கோல்ட் ஜீவுளி மண்டபத்திலும், வரணி பிரதேச வைத்தியசாலை, கொடிகாமம் பிரதேச வைத்தியசாலையிலும்,
யாழ்ப்பாணம் சுகாதார பிரிவில்
யா/சென். ஜோன்ஸ் கல்லூரி, யா/வைத்தீஸ்வரா கல்லூரி, யா/நல்லூர் துர்க்கா மண்டபத்திலும்,
காரைநகர் சுகாதார பிரிவில்
காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலும்,
கரவெட்டி சுகாதார பிரிவில்
கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலும்,
ஊர்காவற்துறை சுகாதார பிரிவில்
ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலும்
கோப்பாய் சுகாதார பிரிவில் கோப்பாய் பிரதேச வைத்தியசாலை,  அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை, புத்தூர் சோமஸ்கந்தா வித்தியாலயம்
உரும்பிராய் இந்துக் கல்லூரியிலும்,
மருதங்கேணி சுகாதார பிரிவில்
மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை, கடைக்காடு ரோ.க.த.க பாடசாலையிலும்,
நல்லூர் சுகாதார பிரிவில்
யா/செங்குந்தா வித்தியாலயம், யா/முத்துத்தம்பி மகா வித்தியாலயம், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, மஞ்சவனப்பதி கோவிலிலும்,
பருத்தித்துறை சுகாதார பிரிவில்
யா/வட இந்து மகளிர் கல்லூரியிலும்,
சண்டிலிப்பாய் சுகாதார பிரிவில் மானிப்பாய் பிரதேச வைத்தியசாலை, மானிப்பாய் மெமோறியல் பாடசாலை, நவாலி மகா வித்தியாலயத்திலும்
தெல்லிப்பளை சுகாதார பிரிவில்
யா/வசவிளான் மத்திய கல்லூரியிலும்
உடுவில் சுகாதார பிரிவில்
யா/புன்னாலைக்கட்டுவன் சித்திவிநாயகர் பாடசாலை,
யா/ உடுவில் மகளிர் கல்லூரி,
யா/இணுவில் இந்துக் கல்லூரி,
யா/தாவடி இ.த.க பாடசாலை,
உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, ஏழாலை முத்தமிழ் மன்றத்திலும் இடம்பெறவுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்