Thu. Apr 25th, 2024

யாழ் மாவட்டத்தில் கண்புரை சத்திர சிகிச்சை19ம் திகதி

யாழ் மாவட்டத்தில் கண்புரை சத்திரசிகிச்சை தேவைப்படுபவர்களுக்கான அடுத்த கட்ட சத்திரசிகிச்சை முகாம் யாழ் போதனா வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி மலரவன் அவர்களினால் எதிர்வரும் மே 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளது. இச்சத்திர சிகிச்சைக்காக தெரிவு செய்யப்பட்டவர்கள் எதிர்வரும் மே 15 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 09.00 மணிக்கு வேலணைப் பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்கள் வேலணை பிரதேச வைத்தியசாலைக்கும்,  காரைநகர் பிரதேசத்தில் இருந்து சத்திரசிகிச்சைக்காக தெரிவு செய்யப்பட்டவர்கள் காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்கும், புங்குடுதீவு பிரதேசத்தில் இருந்து சத்திரசிகிச்சைக்காக தெரிவு செய்யப்பட்டவர்கள் புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலைக்கும் ஊர்காவற்துறை  பிரதேசத்தில் இருந்து சத்திர சிகிச்சைக்காக தெரிவு செய்யப்பட்டவர்கள் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைக்கும் சமூகந்தருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து இவர்களை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல இலவச போக்குவரத்து வசதிகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் 16 ஆம் திகதி சத்திரசிகிச்சைக்குப் பின்னர் இவர்களை மீள அந்தந்த வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட நோயாளர்களுக்கு சுகாதாரத் திணைக்களத்தினால் தொலைபேசி மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
எனவே தெரிவு செய்யப்பட்ட நோயாளர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைக்கு உரிய நேரத்தில் சமூகந்தந்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என யாழ்
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்