Sat. Apr 20th, 2024

யாழ் மற்றும் கிளிநொச்சியில் அபாயகரமான டெல்டா கோரோனோ வைரஸ் நோயாளிகள் கண்டுபிடிப்பு

இலங்கையில் மேலும் 19 பேருக்கு டெல்டா வகை கொவிட் வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு, பிலியந்தல, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் இவ்வாறு டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

கடந்த தினங்களில் பெற்றுக் கொண்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் இவ்வாறு டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இதுவரையில் நாட்டில் 38 பேருக்கு டெல்வா வகை கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்