மீசாலை விபத்தில் இளைஞர் பலி
நேற்று இரவு மீசாலைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆட்டோ சாரதியான இளைஞர் ஒருவர் பலியானார்.
நேற்று இரவு 9.30 மணியளவில் தென்மராட்சி மீசாலை சந்தி – புத்தூர் சந்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் மீசாலை பகுதியைச் சேர்ந்த ராஜன் சிந்துஜன் (வயது 24) என்பவரே உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு மோட்டார் சையிக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிக்குமான விபத்தில் முச்சக்கர வண்டி அருகில் உள்ள மின்கம்பத்துடன் மோதியதில் முச்சக்கர வண்டியை செலுத்திய இளைஞர் உயிரிழந்துள்ளார். சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.