Fri. Mar 29th, 2024

மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் பலி

யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கியதில் இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் நேற்று  மாலை இடம்பெற்றுள்ளது.

யாழ்.நகர் பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது சம்பவத்தில் சதீஷ் (வயது-35) என்ற இளம் குடும்பதர் இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

குறித்த குடும்பத்தர் வீட்டில் பணி புரிந்து கொண்டிருந்தபோதே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்