Thu. Mar 28th, 2024

மாகாண கல்வி பணிப்பாளரின் வாழ்த்துக்கள்

பாடசாலை கட்டமைப்பில் உயரிய பரீட்சை என்று கருதப்படும் க.பொ.த (உ/த) பரீட்சை இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்க இருக்கின்றது. இப்பரீட்சைக்குத் தோற்றுகின்ற அனைத்துத் துறைசார்ந்த மாணவர்களுக்கும் வடமாகாண கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தனது வாழ்த்துக்களை தெரிவித்து நிற்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தனது வாழ்த்துச் செய்தியில் உங்களுடைய தியாகம், பெற்றோர், ஆசிரியர்கள், அதிபர்களின் அர்ப்பணிப்பான சேவையின் ஊடாக நீங்கள் இப்பரீட்சையிலும் வெற்றி பெறுவீர்கள் என நம்புகின்றேன்.
நிதானம், தெளிவு, நம்பிக்கை என்பவற்றை எதிர்வரும் நாட்களில், மிகையாகக் கைக்கொண்டு ஒழுகுங்கள்.
“இங்கு பரீட்சை என்பது எவ்வளவு படித்திருக்கின்றோம் என்பதில் மட்டுமல்ல, எப்படி பதில் எழுதுகின்றோம் என்பதிலும் தான் தங்கியுள்ளது”. சரியானதை தெரிந்து விளங்கி சரியான நேரத்தில் பதில் அளித்துவிடுங்கள்.
நீங்கள் பரீட்சையில் வெற்றி பெற எனது நல்வாழ்த்துக்கள். அத்துடன்
வடக்கு மாகாணத்தில் 139 பரீட்சை நிலையங்களில் பாடசாலை மாணவர்கள் 15156 பேரும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 2399 பேரும் மொத்தமாக 17555 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்