Tue. Apr 23rd, 2024

மருமகனால் மாமனாரின் கை வெட்டப்பட்டது.

காணிப் பிரச்சினை காரணமாக மருமகனால் மாமனாரின் கை வெட்டித் துண்டாடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நேற்று கிளிநொச்சி கண்டாவளைப் பகுதியில் நடைபெற்றுள்ளது.
குறித்த பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய ஒருவரின் கையே வெட்டப்பட்டு ஆற்றில் வீசப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பொலீஸ் பிரிவிற்குட்பட்ட கண்டாவளை பகுதியில் காணிப் பிரச்சனை காரணமாக கைகலப்பு முற்றிய நிலையில் மருமகனால் மாமனாரின் கை வெட்டப்பட்டு ஆற்றில் வீசப்பட்டது. சம்பவம் தொடர்பாக விடயம் அறிந்த உறவினர்களால் குறித்த நபர் உடனடியாக தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.  சம்பவம் தொடர்பாக பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்