மண்ணெண்ணெய் ஊற்றி தீக் காயத்துடன் குடும்பப் பெண்
தனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயன்ற இளவயது குடும்பப் பெண் ஒருவர் எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று பருத்தித்துறை கொட்டடி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய பெண் ஒருவரே தீக் காயத்திற்கு இலக்காகிய நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.