அனுமதியற்ற முறையில் மணல் ஏற்றிவந்த மகேந்திரா கப் வாகனத்தை நெல்லியடி பொலீஸார் மீட்டுள்ளனர்.
வடமராட்சி முள்ளி பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிவருவதாக பொலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தேடுதல் நடாத்திய போது மகேந்திரா கப் வாகனத்தில் மணல் ஏற்றியமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க முற்பட்ட போது வாகனத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளனர். குறித்த வாகனத்தை பொலீஸார் மீட்டுள்ளனர்.