Fri. Apr 19th, 2024

புவிதரன் இலங்கைக்கான புதிய சாதனை

யாழ்ப்பாணத்தை சேர்ந்த புவிதரன் தேசிய சாதனையைப் பதிவு செய்துள்ளார்.
ஆசிய தடகள போட்டிக்கான தகுதிகாண் போட்டியிலேயே அவர் இந்த சாதனையைப் பதிவு செய்துள்ளார்.
ஆசிய தடகளப் போட்டிக்கான தகுதிகாண் போட்டி இன்று
தியகம மகிந்த ராஜபக்ச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் திறந்த வயது பிரிவிற்கான கோலூன்றிப்பாய்தல் தகுதிகாண் போட்டியில் இராணுவ மெய்வல்லுநர் போட்டி வீரராக பிரதிநிதித்துவம் செய்த சிறிகந்தராசா புவிதரன் 5.15m பாய்ந்து புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளார். சாவகச்சேரி இந்துக் கல்லூரி பழைய மாணவராகிய இவர் இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தடகளப் போட்டியில் கோலூன்றி பாய்தலில் சாதனைகளை பதிவு செய்துள்ளார். இவருக்கான பயிற்சிகளை கணாதீபன் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்