Sat. Apr 20th, 2024

பால் புரையேறி 10 மாத குழந்தை உயிரிழப்பு

10 மாதங்களேயான குழந்தை பால் புரையேறியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை வடமாராட்சி கிழக்கு செம்பியன்பற்று மாமுனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணையில் பால் கொடுக்கப்பட்ட போது புரையேறி மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த குழந்தையை அம்பன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் குழந்தை இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மரண விசாரணையை பருத்தித்துறை பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராசா மேற்கொள்ளவுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்