பளை பொலீஸ் இருவரை காணவில்லை போதையா? வழிதவறியா? விசாரணை
பளைப் பகுதியில் கடையாற்றும் பொலீஸார் இருவர் காணமல் போயுள்ளதுடன், அவர்கள் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
பளைப் பொலீஸ் பிரிவில் கடமையாற்றும் இருவர் நேற்று சுற்றுக்காவல் நடவடிக்கைக்காக சென்றுள்ளனர். இவர்கள் இருவரும் மீளவும் பொலீஸ் நிலையத்திற்கு திரும்பவில்லை. இவர்கள் வழிதவறி வரவில்லையா என சந்தேகிக்கப்படும் அதேவேளை கஞ்சாவுடன் இருபொலீஸார் மற்றும் இரு பொதுமகன்கள் உட்பட 4 பேரையும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேக தகவல்கள் வெளியாகியுள்ளன.