Fri. Apr 19th, 2024

பருத்தித்துறை மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நிலையங்களும், நேரமும்

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பிரிவு பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் பணிகள் 21ம், 22ம் திகதிகளில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையில் நடைபெறவுள்ளது.

இதில் 21ம் திகதி காலை 8.30 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரை பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர் தரப் பாடசாலை மாணவிகளுக்கும், நண்பகல் 12 மணி முதல் 2 மணிவரை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவர்களுக்கும்,  22ம் திகதி காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவர்களுக்கும்,  9.30 மணி முதல் 11 மணி வரை வட இந்து மகளிர் கல்லூரி மாணவர்களுக்கும்,  11 மணி முதல் 1 மணி வரை வேலாயுதம் மகா வித்தியாலயம்,  சிவப்பிரகாச வித்தியாலயம்,  புற்றளை மகா வித்தியாலயம்,  வல்வை மகளிர் கல்லூரி,  சிதம்பர கல்லூரி மாணவர்களுக்கும் ஏற்றப்படவுள்ளது. உரிய நேரத்தில் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து அனைத்து மாணவர்களும் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்