பருத்தித்துறை பிரதேச செயலக விளையாட்டு விழா பரிசளிப்பு நிகழ்வு
பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான விளையாட்டு விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கான வெற்றிக் கிண்ணங்கள் மற்றும் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை 27ம் திகதி பருத்தித்துறை பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
பருத்தித்துறை பிரதேச செயலக செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறி தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக யாழ் மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்கள உதவி ஆணையாளர் இராமலிங்கம் சிவகரன், சிறப்பு விருந்தினராக கரவெட்டி பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் சுப்பிரமணியம் ரவிகரன், கெளரவ விருந்தினராக பருத்தித்துறை வர்த்தக சங்கத் தலைவர் சண்முகம் குமாரு யாழ் மாவட்ட செயலக விளையாட்டு உத்தியோகத்தர் கதிர்வேலு விஜிதரன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.