பருத்தித்துறை நகரசபை பாதீடு வெற்றி
பருத்தித்துறை நகர சபை பாதீடு நகரசபை தலைவர் வாக்கால் வெற்றி பெற்றுள்ளது.
பருத்தித்துறை நகரசபை 15 உறுப்பினர்களை கொண்டது. இதன் பாதீடு இன்று சபையில் சமர்பிக்கப்பட்டது. இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 6 வாக்குகள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஒரு வாக்கும் உட்பட 7 வாக்குகள் எதிராகவும் , தமிழரசு கட்சி 5, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஒரு வாக்கு, சுயேட்சை சமத்துவக் கட்சி ஒரு வாக்கு என 7 வாக்குகள் ஆதரவாகவும் வாக்களிக்கப்பட்டது. ஈழமக்கள் ஜனநாயக ஒரு உறுப்பினர் சமூகமளிக்கவில்லை. வாக்குகள் சமநிலையில் காணப்பட்டதனால் நகரசபை தலைவர் வாக்கு பெறப்பட்டது. அவர் ஆதரவாக வாக்களிக்க பாதீடு வெற்றி பெற்றது.