பருத்தித்துறை நகரசபை உறுப்பினர்கள் கூண்டோடு தனிமைப்படுத்தல்
பருத்தித்துறை நகரசபை தலைவர், மற்றும் ஊழியர்கள் என பலரும் இன்று தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஒருவர் காய்ச்சலுடன் நேற்று நடைபெற்ற பாதீட்டில் கலந்து கொண்டுள்ளார். அவருக்கான பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று அவருடன் நெருங்கிய தொடர்புடைய இருவர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்னர். அதன் பின்னர் இன்று நகரசபை தலைவர், 14 உறுப்பினர்கள் மற்றும் நகரசபை ஊழியர்கள் என பலரும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.