பருத்தித்துறை நகரசபை உறுப்பினருக்கு கொரோனா இருவர் சுயதனிமைப்படுத்தலில்
பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் இரு உறுப்பினர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை செட்டிதெருவைச் சேர்ந்த 76 வயதுடைய பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஒருவருக்கே இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த உறுப்பினர் இன்று நடைபெற்ற பாதீட்டில் கலந்து கொண்டுள்ளார். பாதீட்டில் குறித்த உறுப்பினர் காச்சலுடன் கலந்து கொண்டுள்ளார். அதன் பின்னர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதீட்டில் 14 பேர் கலந்து கொண்ட போதிலும் இரு உறுப்பினர்கள் மாத்திரமே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.