Thu. Apr 25th, 2024

பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கின் பொன்விழா கிண்ணத்திற்கான இறுதியாட்டமும் பரிசளிப்பு விழாவும்

பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கின் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு N.B.C.M.அனுசரணையில் பொன்விழா கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதியாட்டமும் பரிசளிப்பு விழாவும் நாளை மறுதினம் (03.06.2023) சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கின் தலைவர் மா.நவநீதமணி தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக கடற்றொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா அவர்களும்,  சிறப்பு விருந்தினர்களாக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், இலங்கை உதைபந்தாட்ட நடுவர் சம்மேளனத்தின் செயலாளரும், ஆசிய உதைபந்தாட்ட சம்மேளன நிறைவேற்றுக்குழு அதிகாரியுமான யஸ்வர் உமர், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன், N.B.C.M. பவுண்டேஷன் தலைவர் சி.தயாபரன் அவர்களும் கெளரவ விருந்தினர்களாக பருத்தித்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி பியந்த அமரசிங்க, அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக் கழக தலைவர் க.மகாவலிராஜன்,  N.B.C.M. அக்கடமியின் தலைவர் சி.துவாரகன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன் இறுதியாட்டத்தில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணியை எதிர்த்து அல்வாய் மனோகரா அணி மோதவுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்