Thu. Mar 28th, 2024

பருத்தித்துறையில் உள்ளாடைக்குள் ஹெரோயினை மறைத்த சிறுமி

வடமராட்சி பருத்தித்துறை பொலீஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமி தனது உள்ளாடைக்குள் ஹெரோயின் போதைப் பொருளை மறைத்து வைத்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டு பருத்தித்துறை பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை பொலீஸ் பிரிவிற்குட்பட்ட காந்தியூர் பகுதியில் நேற்று  திங்கட்கிழமை இரவு வேளை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் போதைப் பொருள் விற்பனை நடைபெறுவதாக யாழ் விசேட அதிரடிப்படைப் பிரிவினருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து குறித்த பகுதியில் பெண் அதிரடிப்படையுடன் சோதனையை மேற்கொண்ட அதிரடிப்படையினர் குறித்த வீட்டில் வசிக்கும் 16 வயதுச் சிறுமி தனது உள்ளாடையில் 5.5 கிராம் ஹெரோயின் வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த சிறுமியை பருத்தித்துறை பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்