Wed. Apr 24th, 2024

பயணத் தடையிலும் ஆசிரியர்கள் கையொப்பம் இட வேண்டிய நிலை -ஆசிரியர்கள் விசனம்

யாழ்ப்பாணம் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்,  ஆசிரியர்களின் மற்றும் ஊழியர்களை சம்பள விபரப் பட்டியலில் கையொப்பம் இடுமாறு பணிக்கப்பட்டமைக்கு தமது விசனத்தை வெளியிட்டுள்ளனர்.

தற்போது கொரோனா அதிகரிப்பால் பயணத் தகை விதிக்கப்பட்டுள்ளது.  வீதிகளில் போக்குவரத்து கடமையில் ஈடுபடும் பொலீஸாரால் வீதிகளில் நடமாடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பாடசாலைகளுக்கு சிலர் பேரூந்துகளிலேயே சென்று கடமை புரிகின்றனர்.  இந்நிலையில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலைகளுக்கு வருகை தந்து கையொப்பம் இடுவது என்பது பொருத்தமற்ற விடயம் என குறிப்பிட்டுள்ளனர்.
யாழ் கல்வி வலய அதிபர்களுக்கான குழுமத்தில் வலயக் கல்வி அலுவலகத்தில் சம்பள விபரப் பட்டியலிலைப் பெற்று ஆசிரியர்களின் கையொப்பத்துடன் ஒப்படைக்குமாறு கணக்காளரினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தற்போதைய அசாதாரண சூழ்நிலை கருத்தில் கொண்டு அதிகாரிகள் செயற்படுமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்